அரசு இராஜாஜி மருத்துவமனை சாதனை - டீன் பேட்டி

52பார்த்தது
மதுரை மாவட்டம் பேரையூர் மல்லப்புரத்தை சேர்ந்த 63வயதான முதியவர் சேகர். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு கடும் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் முதியவரின் மகன் அன்பரசன் மதுரை தனியார் மருத்துவமனையில் சேகரை சேர்த்த போது, அவருக்கு இருதய பாதிப்புடன், இரத்தக்குழாயில் ஓட்டை மற்றும் இரத்தக்குழாய் தமனி வீக்கம் உள்ளிட்டவை இருப்பது கண்டறியப்பட்டது.

இதனையடுத்து சேகருக்கு அறுவை சிகிச்சை செய்ய 20 இலட்ச ரூபாய் செலவாகும் எனவும் உயிருக்கு உத்தரவாதம் இல்லை என்றவுடன் தனது தந்தையை மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனையில் அனுமதித்து உள்ளார்.

அங்கு இருதய நெஞ்ச அறுவை சிகிச்சை பிரிவில் சிகிச்சை கொடுக்கப்பட்டு தொடர் கண்காணிப்பில் இருந்த நிலையில், இரத்தக்குழாய் வீக்கம் கழுத்து வரை வளர்ந்ததோடு, இரத்தக்குழாய் அடைப்பு மற்றும் ஸ்டென்டு பொருத்தும் அவசியமும் எழுந்தது.

இதனையடுத்து இருதய அறுவைசிகிச்சை குழு, மயக்க மருந்தவியல் குழு இணைந்து கழுத்துப்பகுதியில் பைபாஸ் அறுவைசிகிச்சை, இருதய ஸ்டென்ட் சிகிச்சை, மகாதமனி வீக்கத்திற்கான அறுவை சிகிச்சை உள்ளிட்ட மூன்று அறுவை சிகிச்சைகளையும் ஓரே முறை 8 மணி நேரத்தில் வெற்றிகரமாக செய்து முடித்துள்ளனர்.


தனியார் மருத்துவமனைகளில் கூட இந்தளவுக்கு சிகிச்சை கொடுக்க முடியாத நிலையில் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் புதிய சாதனை படைத்துள்ளனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி