மதுரை திருமலை நாயக்கர் அரண்மனையை பார்வையாளர்கள் இலவசமாக கண்டு ரசிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மதுரையில் உள்ள சுற்றுலா தலங்களில் மிக முக்கியமான தலமான திருமலை நாயக்கர் அரண்மனை கீழவாசல் அருகே உள்ளது. இங்கு நாள்தோறும் உள்நாடு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் ஆயிரக்கணக்கானோர் வந்து அரண்மனையை கண்டு ரசித்து செல்வார்கள்.
இந்நிலையில் உலக மரபு தின விழாவை முன்னிட்டு நாளை ஏப்ரல் 18 ம்தேதி முதல் 24 ம்தேதி வரை மகாலை பார்வையாளர்கள் கட்டணமின்றி இலவசமாக கண்டு ரசிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.