தனுஷை தனது மகன் என்றவர் உயிரிழப்பு

65பார்த்தது
தனுஷை தனது மகன் என்றவர் உயிரிழப்பு
நடிகர் தனுஷை தனது மகன் என வழக்கு தொடர்ந்த கதிரேசன் உடல்நலக்குறைவால் காலமானார்.


நடிகர் தனுஷை தனது மகன் எனக்கூறி மதுரை மேலூரை சேர்ந்த கதிரேசன் - மீனாட்சி தம்பதியினர் உயர்நீதிமன்ற மேலூர் நீதிமன்றம், மதுரை மாவட்ட நீதிமன்றம் தொடங்கி பின்னர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்நிலையில் கடந்த ஆண்டு உடல்நலக்குறைவு காரணமாக கதிரேசன் (70) மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். பின்னர் உடல் நலம் தேறிய நிலையில் சில நாட்களுக்கு முன்பு மீண்டும் உடல்நலக்குறைவு ஏற்பட்டு அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலமானார். இதனையடுத்து அவரது உடலானது திருப்புவனத்தில் உள்ள கதிரேசனின் மகள் வீட்டிற்கு எடுத்துச்செல்லப்பட்டது.

கதிரேசன் உடல்நிலை மோசமாக உள்ளதாகவும், வழக்கின் விசாரணைக்காக அவரது மரபணுவை (டி. என். ஏ) சேகரித்து பாதுகாக்க வேண்டும் எனக்கூறி அவரது மனைவி மீனாட்சி மற்றும் வழக்கறிஞர் டைட்டஸ் ஆகியோர் மருத்துவமனை முதல்வரிடம் ஏற்கனவே கோரிக்கை மனு அளித்ததும் குறிப்பிடதக்கது. ஆனால் DNA மாதிரி எடுக்கப்படவில்லை.

தனுஷ் தனது மகன் என நீதி கேட்டு நீதிமன்றங்களில் வழக்குகள் தொடுத்து வந்த கதிரேசன் - மீனாட்சி தம்பதியினரில் கதிரேசன் காலமானது அவரது குடும்பத்தினரிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி