வைகாசி பெருந்திருவிழா கொடியேற்றம்

60பார்த்தது
வைகாசி பெருந்திருவிழா கொடியேற்றம்
மதுரை, சோழவந்தான் ஜெனகைமாரியம்மன் கோவில் மூன்றுமாத கொடியேற்றம் விழா நடந்தது. மதுரை மாவட்டம், சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் மிகவும்
பிரசித்தி பெற்ற கோவிலில் ஒன்றாகும்.


இங்கு வருடந்தோறும் வைகாசி அமாவாசைக்குப் பின்னர் வரும் திங்கட்கிழமை திருவிழா கொடியேற்றம் நடைபெறும். இதைத் தொடர்ந்து, 17 நாட்கள் திருவிழா சிறப்பாக நடைபெறும். இதற்கு முன்பாக பங்குனி மாத அமாவாசைக்குப் பின்னர் வரும் திங்கட்கிழமை சுற்றுப்புற கிராம பக்தர்களுக்கு திருவிழா நடத்துவதற்கு முன்பாக அறிவிப்பாக மூன்று மாத கொடியேற்று விழா நடைபெறும். இதேபோல், இந்த ஆண்டு திருவிழா ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.


இதற்கான 3 மாத கொடியேற்று விழா நேற்று இரவு நடந்தது. இந்த மூன்று மாதக் கொடி கம்பம் எடுத்துக் கொண்டு கடைவீதி, தெற்குரதவீதி, மேலரதுவீதி, வழியாக வைகைஆற்றுக்குச் சென்று அங்கு மூன்று மாத கம்பத்தை வைத்து பூஜைகள் நடந்தது.
இதைத் தொடர்ந்து வடக்குரத
வீதி, கடைவிதி, மாரியம்மன்சன்னதி வழியாக கோவிலை
வந்தடைந்தனர். கோவில் முன்பாக உள்ள மூன்று மாத கொடிபீடத்தில் மூன்று மாதகொடி ஏற்றும் விழா நடந்தது.
பூஜைகள் நடைபெற்று பிரசாதம் வழங்கப்பட்டது.

சோழவந்தான் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி