அனைத்து பேருந்துகளும் வந்துசெல்ல கோரிக்கை

66பார்த்தது
அனைத்து பேருந்துகளும் வந்துசெல்ல கோரிக்கை
மதுரை, சோழவந்தான் பேருந்து நிலையத்திற்குள் அனைத்து பேருந்துகளும் வந்து செல்ல போக்குவரத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர். சோழவந்தானில் இருந்து வாடிப்பட்டி செல்லும் பேருந்துகள் மற்றும் வாடிப்பட்டியிலிருந்து, சோழவந்தான் வரும் பேருந்துகள் அனைத்தும் பேருந்து நிலையம் வந்து செல்ல வேண்டுமென, பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

பேருந்து நிலையம் வந்து செல்வதற்கு அங்கு சாலை போதிய அளவில் இல்லை என, போக்குவரத்து பணியாளர்கள் கூறிவந்த நிலையில், மதிய உணவு இடைவேளையிலும் ஓட்டுநர் மற்றும் நடத்துனர்கள் ஷிப்ட் மாறும் போதும் பேருந்து நிலையத்திற்கு உள்ளே வாடிப்பட்டி பேருந்துகள் வந்து செல்கின்றன.

மற்ற நேரங்களிலும் பேருந்து நிலையத்திற்குள் வந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் கூறுகின்றனர். தனியார் பேருந்துகளில் சில பேருந்துகள் மட்டும் பேருந்து நிலையம் வந்து செல்கிறது. மற்ற பேருந்துகள் ஜெனகை மாரியம்மன் கோவில் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி வட்ட பிள்ளையார் கோவில் வழியாக சென்று விடுகிறது.

இதனால், வெளியூர்களுக்கு செல்லும் பயணிகள் பேருந்துநிலையத்திற்குள் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. ஆகையால், பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு அனைத்து பேருந்துகளும் சோழவந்தான் பேருந்து நிலையத்திற்கு வந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி