ரயில்வே அமைச்சரிடம் மதுரை எம்.பி., சு. வெங்கடேசன் கடிதம்

61பார்த்தது
ரயில்வே அமைச்சரிடம் மதுரை எம்.பி., சு. வெங்கடேசன் கடிதம்
ரயில்வே அமைச்சர் அஸ்வின் வைஷ்ணவிடம் மதுரை மக்களவை உறுப்பினர் சு. வெங்கடேசன் நேரில் சென்று ரயில்வே துறை சம்பந்தமான கோரிக்கைகள் அடங்கிய கடிதத்தை வழங்கியுள்ளார். அதில், இந்திய இரயில்வேயில் கடந்த ஆண்டு (2022-23) மட்டும் 51,888 சிக்னல்கள் செயழிலந்துள்ளன. ரயில் ஓட்டுநர்களுக்கு தொடர்ச்சியாக நான்கு நாட்களுக்கு மேல் இரவு பணி, போதுமான ஓய்வு இல்லை. இதனால் விபத்துகள் அதிகரித்துள்ளது. ஓட்டுநர்களின் கோரிக்கை ஊழியர்களுக்கானது மட்டுமல்ல. பயணிகளுக்கானதும் தான் என தெரிவித்துள்ளார். எனவே மனித தவறுக்கான காரணத்தை நீக்கி பாதுகாப்பை உறுதி செய்ய தயவு செய்து தலையிட்டு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி