விஜய் டிவியில் "லொள்ளு சபா" நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களின் கவனத்தை பெற்றவர் சேஷு. இந்நிலையில் திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அவர் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருடைய சிகிச்சைக்கு ரூ.10 லட்சத்திற்கு மேல் தேவைப்படுகிறது. இதனால் சேஷுவின் உயிரைக் காப்பாற்ற பொதுமக்களும் ரசிகர்களும் ரூ.10 லட்சம் நன்கொடையாக கொடுத்து உதவும்படி அவரது உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.