திருப்பூர் விளையாட்டுத் துறையில் சாதிக்க துணை நிற்போம்: உதயநிதி ஸ்டாலின்

80பார்த்தது
திருப்பூர் விளையாட்டுத் துறையில் சாதிக்க துணை நிற்போம்: உதயநிதி ஸ்டாலின்
திருப்பூர் மாவட்டத்தின் 265 கிராம ஊராட்சிகளுக்கு 410 கலைஞர் விளையாட்டு உபகரணங்களை இன்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். திருப்பூரில் இன்று நடந்த, கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி குறித்து தனது பக்கத்தில், நமது மாநிலத்திற்கு பெருமை சேர்த்திடும் வகையில் எண்ணற்ற விளையாட்டு வீரர்களை உருவாக்கி வரும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் புதிய லோகோவையும் வெளியிட்டோம். தொழில்துறையில் சிறந்து விளங்கும் திருப்பூர் மாவட்டம் விளையாட்டுத் துறையிலும் சாதனை படைக்க தொடர்ந்து உறுதுணையாக இருப்போம் என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி