இளம் பெண் மாயம் போலீசார் விசாரணை.

1022பார்த்தது
இளம் பெண் மாயம் போலீசார் விசாரணை.
கிருஷ்ணகிரிமாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள கோடிபதி கிராமத்தைச் சேர்ந்தவர் உதயகுமார். இவருடைய மனைவி சசிகலா(32) இவர் போச்சம்பள்ளி சிப்காட் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் வேலை பார்த்து வருகிறார். கடந்த ஒரு வாரமாக, கொட்டாவூரில் உள்ள தனது தாய் வீட்டில் தங்கி சென்று வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 30-ஆம் அன்று மதியம் 2 மணிக்கு வீட்டை விட்டு சென்ற சசிகலா பின்னர் மீண்டும் வீட்டிற்கு வரவில்லை இதனால் அவரை பல இடங்களில் தேடியும் இடங்களில் தேடியும் கிடைக்க வில்லை. விசார ணையில், அதே தொழிற்சாலையில் டிரைவராக பணி புரியும், கவுண்டனூரைச் சேர்ந்த சேட்டு(30) என்பவர், ஆசைவார்த்தை கூறி தனது மகள் சசிகலாவை கடத்தி சென்றிருக்கலாம் என, கல்லாவி போலீசில் புகாரளித்துள்ளார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி