கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் சட்டமேதை பாபாசாகிப் டாக்டர் அம்பேத்கர் அவர்களது பிறந்தநாளை முன்னிட்டு கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளர், பர்கூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான தே. மதியழகன் தலைமையில் அம்பேத்கர் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி "சமத்துவ நாள்" உறுதிமொழி ஏற்றனர்.
சாதி வேறுபாடுகளுக்கு எதிராகவும், சாதிகளின் பெயரால் நடக்கும் சமூக அடுக்குமுறைகளுக்கும் எதிராகவும், தொடர்ந்து போராடி, ஒதுக்கப்பட்டவர்களுடைய உரிமைகளுக்காகவும், ஒடுக்கப்பட்டவர்களுடைய சமத்துவத்திற்காகவும், வாழ்நாள் முழுவதும் குரல் கொடுத்து, எளிய மக்களின் உரிமைகளை பற்றி விழிப்புணர்வை ஊட்டிய, நம் அரசியலமைப்புச் சட்டத்தை வகுத்துத் தந்த அண்ணல் அம்பேத்கர் அவர்களுடைய பிறந்த நாளில், சாதி வேறுபாடுகள் ஏதுமில்லாத சமத்துவ சமுதாயத்தை அமைக்க, நாம் அனைவரும் பாடுபடுவோம் என்றும், சக மனிதர்களை சாதியின் பெயரால் ஒருபோதும் அடையாளம் காணமாட்டேன் என்றும், சக மனிதர்களிடம் சமத்துவத்தை வாழ்நாள் முழுவதும் கடைப்பிடிப்பேன் என்றும் உளமார உறுதி ஏற்கிறேன் என உறுதிமொழி ஏற்கப்பட்டது.