கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டிணம் அடுத்துள்ள கூரம்பட்டி பகுதியில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ மாரியம்மன் கோயில் மஹா கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது. இதில் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு மாரியம்மனை வழிபாட்டு தரிசனம் செய்தனர். பின்னர் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.