தேமுதிக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.

83பார்த்தது
தேமுதிக கழகப் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அவர்களின் ஆணைக்கிணங்க, போதை இல்லா தமிழகத்தை உருவாக்க தவறிய திமுக அரசை கண்டித்து கிருஷ்ணகிரி மாவட்ட தேமுதிக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
போதையில்லா தமிழகத்தை உருவாக்க தவறிய ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசை கண்டித்து கிருஷ்ணகிரி மாவட்ட தேமுதிக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் கிருஷ்ணகிரி அண்ணா சிலை எதிரே நடைபெற்றது. கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளர் எஸ். சீனிவாசன், வரவேற்புரை ஆற்றினார். மேற்கு மாவட்ட கழக செயலாளர் எஸ். எம். முருகேசன், மாநில விவசாய அணி துணைச் செயலாளர் ஆர். என். ராமலிங்கம், மாநில வர்த்தக அணி துணை செயலாளர் எம். முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு கழக உயர்மட்ட குழு உறுப்பினர் பி கிருஷ்ணமூர்த்தி கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார்.

தொடர்புடைய செய்தி