இருச்சக்கர வாகனத்தை திருட முயன்ற வாலிபருக்கு காப்பு.

57பார்த்தது
இருச்சக்கர வாகனத்தை திருட முயன்ற வாலிபருக்கு காப்பு.
கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை அடுத்துள்ள சஜ்ஜல்பட்டி பகுதியை சேர்ந்தவர் குமார்(35) பூ வியாபாரியான. இவர் இருச்சக்கர வாகனத்தில் கெலமங்கலம் போருந்து நிலையம் அருகே உள்ள ஒரு கடை முன்பு நேற்று முன்தினம் நிறுத்தி விட்டு கடைக்கு சென்றார். அப்போது இந்த பகுதியிக்கு வந்த வாலிபர் ஒருவர் திடீரென குமாரின் இருச்சக்கர வாகனத்தை திருட முயன்றபோது இதை பார்த்த குமார் அந்த வாலிபரை பிடித்து ராயக்கோட்டைபோலீசில் ஒப்படைத்தார். விசாரணையில் அவர் சாக்கனக்கல் பகுதியை சேர்ந்த முருகன்(34) என்பது தெரியவந்தது. இதை அடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி