நிலத்தகராறில் 3 பேரை தாக்கியவர் கைது.

63பார்த்தது
நிலத்தகராறில் 3 பேரை தாக்கியவர் கைது.
கிருஷ்ணகிரி மாவட்டம் கந்திகுப்பம் அடுத்துள்ள காட்டு சீமனூர் பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமார் (24) விவசாயி. இவரது சித்தப்பா கமலேசன் (49) இவர்களுக்குடையே நிலத்தகராறு இருந்து வந்துள்ளது. சம்மவம் அன்று இதனால் ஏற்பட்ட பிரச்சினையில் சதீஷ்குமார், அவரது தந்தை மாதப்பன் (50) தாய் பிரபாவதி (43) ஆகியோரை கமலேசன் தாக்கியுள்ளார். இது குறித்து சதீஷ்குமார் கொடுத்த புகாரின் பேரில் கந்திகுப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கமலேசனை கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி