வக்பு வாரிய நிர்வாகத்தின் கீழ் கொண்டு வரப்பட்ட யாரப் தர்கா

85பார்த்தது
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள தேன்கனிக்கோட்டை நகரில் ஹஜ்ரத் யாரப் தர்கா உள்ளது. தமிழ்நாடு வக்பு வாரியத்தின் சேலம் மேற்கு சரக கண்காணிப்பாளர் பாபு மற்றும் இன்ஸ்பெக்டர் சையது வாஜித் ஆகியோர் தேன்கனிக்கோட்டை தாசில்தார் பரிமேல் அழகன், டி. எஸ். பி. , சாந்தி மற்றும் வி. ஏ. ஓ. , க்களுடன் நேற்று நேரடியாக சென்று வக்பு வாரியத்தின் நேரடி நிர்வாகத்தின் கீழ் ஹஜ்ரத் யாரப் தர்காவை கொண்டு வந்தனர்.
இதையடுத்து, தர்காவின் பொறுப்புகள் அனைத்தும் வக்பு வாரியத்திடம் ஒப்படைக்கப்பட்டன.

இதற்கு மேல் வாடகை மற்றும் குத்தகைதாரர்கள் தாங்கள் செலுத்தும் வாடகை அல்லது குத்தகை தொகையை, நிர்வாக அதிகாரியிடம் செலுத்தி ரசீது பெற்று கொள்ள வேண்டும். இதை தவிர்த்து பிற நபர்களிடம் செய்யப்படும் வரவு, செலவிற்கு நிர்வாகம் பொறுப்பேற்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி