மின்சாரம் தாக்கி தொழிலாளி உயிரிழப்பு

2646பார்த்தது
மின்சாரம் தாக்கி தொழிலாளி உயிரிழப்பு
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் ஜூஜூவாடி ஜெய்பீம் நகரை சேர்ந்தவர் கிருஷ்ணன் என்ற கிச்சா வயது 51. இவர் கட்டிட தொழிலாளி. இவர் சம்பவம் அன்று சின்ன எலசகிரி பகுதியில் வீடு ஒன்றில், மேற்கூரையில் சீட் அமைக்கும் பணியில் ஈடுபட்டார். அப்போது எதிர்பாரதவிதமாக அங்கிருந்த மின்சார ஒயரில் அவரது கை பட்டு, மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து சிப்காட் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி