தனியார் நிறுவன உரிமையாளர் வீட்டில் பணம் திருட்டு.

57பார்த்தது
தனியார் நிறுவன உரிமையாளர் வீட்டில் பணம் திருட்டு.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாருதி நகர் பகுதியை சேர்ந்தவர் முகமது தப்ரஸ் (35). தனியார் நிறுவன உரி மையாளர். இந்த நிலையில் சம்பவம் அன்று இவர் வீட்டை பூட்டி விட்டு திருப்பத்தூர் சென்று இருந்தார். மீண்டும் வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் முன்புற கதவு உடைக்கப்பட்டு இருந்தது. வீட்டில் உள்ளே சென்று பார்த்த போது ரூ. 1 லட்சத்து 50 ஆயிரம், மற்றும் தனது தாய், தந்தையரின் பாஸ்போர்ட் உள்ளிட்டவை திருட்டு போனது தெரிய வந்தது. இது குறித்து அவர் அட்கோ போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி