ஓசூர் ஜூஜூவாடியில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் திறப்பு

70பார்த்தது
ஓசூர் மாநகராட்சிக்கு உட்பட்ட ஒன்றாவது வார்டு ஜூஜூவாடியில் ஒன்றாவது வார்டு மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் நகரமைப்பு தலைவர் அசோகா பங்களிப்பில் 7 லட்சம் ரூபாயும் மாநகராட்சி நிதியிலிருந்து சுமார் மூன்று லட்சம் ரூபாயும் வழங்கப்பட்டு 10 லட்சம் ரூபாய் மதிப்பில் அப்பகுதியில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டது.

இந்த புதிய குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை மாநகராட்சி மேயர் சத்யா ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார் இதில் மாநகராட்சி ஆணையாளர் சினேகா, ஒன்றாவது வார்டு உறுப்பினர் அசோகா , இரண்டாவது வார்டு உறுப்பினர் கல்வி குழு தலைவர் ஸ்ரீதர் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி