பாரத பிரதமராக நரேந்திர மோடி அவர்கள் பதவியேற்றத்தை முன்னிட்டு ஓசூர் கிழக்கு மாநகர பாஜக சார்பில் ஒசூர் பெரியார் நகரில் பட்டாசுகள் வெடித்து பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக பாஜக கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட தலைவர் நாகராஜ் அவர்கள் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். உடன் மாவட்ட செயலாளர் பிரவீன் குமார், மாநகர தலைவர் மணிகண்டன், மாநகர துணை தலைவர் ஸ்ரீனிவாசன், மாநகர பொது செயலாளர் வெங்கடேசலு, மாநகர பொருளாளர் நஞ்சுண்டா, மாவட்ட செயற்குழு உறுப்பினர் நாராயணன் மற்றும் மாநகர நிர்வாகிகள் கிரண் ராவ், ரஞ்சித், அப்பி ருக்மணி மற்றும் நிர்வாகிகள் இருந்தனர்