அஞ்செட்டியில் இலவச கண் சிகிச்சை மருத்துவ முகாம்

82பார்த்தது
ஒசூர் அருகே உள்ள அஞ்செட்டியில் தமிழ்நாடு சிறப்பு படை ஒகேனக்கல் முகாம் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டம் பார்வை இழப்பு தடுப்பு சங்கம், எக்விடாஸ் ஸ்மால் பைனான்ஸ் பேங்க், திருச்செங்கோடு விவேகானந்தா கண் மருத்துவமனை ஆகியோர் சார்பில் இலவச கண் சிகிச்சை மருத்துவ முகாம் நடைபெற்றது.

இந்த முகாமில் நோயாளிகளுக்கு கண்ணில் புரை உண்டாகுதல், கண்ணில் சதை வளர்ச்சி, மாறுகண், நீர் அழுத்த நோய், கண்ணில் நீர் வடிதல், கிட்டப்பார்வை, தூரப்பார்வை ஆகியவைகள் இலவசமாக பரிசோதனை செய்யப்பட்டது. கண்புரை அறுவை சிகிச்சைக்கு தேர்ந்தெடுக்கப்படும் நோயாளிகள் விவேகானந்தா கண் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு கண்புரை அறுவை சிகிச்சை செய்யப்படும். எனவும் தெரிவித்தார்கள்.

அறுவை சிகிச்சை செய்பவர்களுக்கு IOL லென்ஸ், மருந்து மாத்திரைகள், உணவு, தங்குமிடம் மற்றும் போக்குவரத்து செலவுகள் அனைத்தும் இலவசம். சர்க்கரை, இரத்த கொதிப்பு, மற்றும் ஆஸ்துமா பிரச்சனை உள்ளவர்கள் அவசியமாக தனது நோய்களுக்கான மருந்து மாத்திரைகளை நோயாளிகள் மருத்துவரிடம் காண்பித்தனர். இதில் பெண்கள் ஆண்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி