ராகுல் காந்தியின் பிறந்தநாள் விழா, காங்கிரஸார் கொண்டாட்டம்

67பார்த்தது
அகில இந்திய காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தியின் 54 ஆவது பிறந்தநாள் விழா இன்று நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சி சார்பில் கொண்டாடப்பட்டு வருகிறது.

அந்த வகையில் ஓசூரில் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் ராகுல் காந்தியின் 54 வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது இதனையொட்டி மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் முரளிதரன் தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். அதனைத்தொடர்ந்து விநாயகர் கோயிலில் ராகுல் காந்தி நலமுடன் வாழ வேண்டி காங்கிரஸ் சார் சிறப்பு பூஜைகள் நடத்தினர்.

தொடர்ந்து ஓசூர் அரசு மருத்துவமனையில் உள்ள நோயாளிகளுக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் பால் மற்றும் பிரட் ஆகியவை இலவசமாக வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில், மாநகர தலைவர் தியாகராஜன், மாவட்ட துணை தலைவர் கீர்த்தி கணேஷ், மாவட்ட பொருளாளர் மாதேஷ், மகளிர் அணி மாவட்ட தலைவி சரோஜம்மா உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி