பர்கூர்: அடிக்கடி ஏற்படும் கொள்ளை, விபத்துகளுக்கு தீர்வு

2983பார்த்தது
பர்கூர்: அடிக்கடி ஏற்படும் கொள்ளை, விபத்துகளுக்கு தீர்வு
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அடுத்த மல்லப்பாடி பஞ்சாயத்தில் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இங்கு மல்லப்பாடி மக்கள் அறக்கட்டளை சார்பில் முக்கிய வீதிகளில் பாதுகாப்பிற்காக சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

இதனை பர்கூர் டி. எஸ். பி. , மனோகரன் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார். மல்லப்பாடியில் அடிக்கடி விபத்துக்களும், திருட்டு சம்பவங்களும் அதிகரித்தன. இதை கட்டுப்படுத்தும் வகையில் பர்கூர் போலீசார் 6 ‘சிசிடிவி’ கேமராக்கள், அறக்கட்டளை சார்பில் 3 ‘சிசிடிவி’ கேமராக்களை ரூ. 2 லட்சம் செலவில் அமைக்கபட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியில், பர்கூர் ஒன்றியக்குழு தலைவர் கவிதா, காரகுப்பம் பஞ்சாயத்து தலைவர் கோவிந்தராசன், மல்லப்பாடி மக்கள் அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளர் குமரவேல், செயலாளர் இளையபாரதி, கதிரவன், பெருமாள், அரும்பு உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

டேக்ஸ் :