எதிர்வரும் போட்டிகளில் கோலி ரன் குவிப்பார்.. ஷிவம் துபே

85பார்த்தது
எதிர்வரும் போட்டிகளில் கோலி ரன் குவிப்பார்.. ஷிவம் துபே
உலகக் கோப்பை தொடரில் மூன்று போட்டிகளில் விளையாடி உள்ள இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி, முறையே 1, 4 மற்றும் 0 ரன்களை எடுத்துள்ளார். கடந்த ஐபிஎல் சீசனில் 741 ரன்களை குவித்திருந்தார். அப்படி இருக்கும் நிலையில் அவரா இது என்ற கேள்வி அவரது ஆட்டத்தை பார்க்கும் போது எழவே செய்கிறது. இந்நிலையில் இதுகுறித்து இந்திய வீரர் ஷிவம் துபேவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு “கோலி குறித்து பேச நான் யார்? அவர் முதல் மூன்று போட்டிகளில் ரன் எடுக்கவில்லை. அடுத்து வரும் மூன்று போட்டிகளில் அவர் மூன்று சதங்கள் விளாசலாம். அப்போது இந்த விவாதங்கள் எழாது” என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி