கடத்தப்பட்ட 2 வயது பெண் குழந்தை மீட்பு

58பார்த்தது
கடத்தப்பட்ட 2 வயது பெண் குழந்தை மீட்பு
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இன்று (மே 23) வடமாநில தம்பதியின் 2 வயது பெண் குழந்தை கடத்தப்பட்டது. இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள் ரயில்வே போலீசாரிடம் புகார் அளித்தனர். உடனடியாக சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அதனை வைத்து, சுமார் ஒன்றரை மணி நேரத்தில் கடத்தப்பட்ட குழந்தை மீட்கப்பட்டது. தொடர்ந்து, குழந்தையை கடத்திய விஜயவாடா பகுதியைச் சேர்ந்த துர்கா மற்றும் சித்தராமையா ஆகியோரை ரயில்வே போலீசார் கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி