கரூர் மாவட்டம் குளித்தலை அருகே நல்லா கவுண்டம்பட்டியை சேர்ந்தவர் கருணாநிதி மகன் கார்த்திகேயன் (33) இவர் தனது பைக்கில் நேற்று ஆர். டி மலை சாலையில் வளைவுபாலம் அருகே சென்ற போது நிலை தடுமாறி மரத்தில் மோதி சம்பவ இடத்திலேயே பலியானார். அவரின் உடல் குளித்தலை அரசு மருத்துவமனையில் சவக்கிடங்கில் வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து கார்த்திகேயன் மனைவி மகாலட்சுமி அளித்த புகாரின் பேரில் தோகைமலை போலீசார் இன்று வழக்குப்பதிந்து விசாரணை.