கப்பல் சின்னத்தில் சுயேட்சை வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பு

70பார்த்தது
கரூர் மாவட்டம் குளித்தலையில் பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதி சுயேட்சை வேட்பாளர் இன்ஜினியர் ரெங்கராஜ் கப்பல் சின்னத்தில் வாக்குகள் கேட்டு பொதுமக்களிடம் பிரச்சாரம் செய்தார். குளித்தலை பேருந்து நிலையம், நீதிமன்றம், பெரியபாலம், சுங்ககேட், மணத்தட்டை, மருதூர், குமாரமங்கலம், தண்ணீர்பள்ளி, கள்ளை, பேரூர், சுக்காம்பட்டி, ஆர். டி மலை, வாலியம்பட்டி, பரளி, மேட்டுமருதூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வாகனத்தைச் சென்று பொது மக்களிடம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

குளித்தலை பேருந்து நிலையம் பகுதியில் வாக்கு சேகரிக்க வந்த சுயேட்சை வேட்பாளரிடம் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் வாக்கு சேகரித்தனர். அதுபோல சுயேட்சை வேட்பாளரும் துண்டு பிரசுரங்களை வழங்கி அவர்களிடம் வாக்கு கேட்டார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி