விசிக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

64பார்த்தது
கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் மேற்கு ஒன்றியம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் தாத்தா ரெட்டைமலை சீனிவாசன் பிறந்த நாள் விழா மற்றும் தமிழக BSP தலைவர் ஆம்ஸ்ட்ராங் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து தமிழக காவல்துறையை கண்டித்து ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது.
கிருஷ்ணராயபுரம் ஒன்றிய செயலாளர் பொ. மகாமுனி (எ) வன்னியரசு தலைமை வகித்தார். கிருஷ்ணராயபுரம் பேரூர் செயலாளர் இரா. உதயநிதி வரவேற்புரை நிகழ்த்தினார். பழைய ஜெயங்கொண்டம் பேரூர் செயலாளர் இரா. முருகேசன் ஆகியோர் வரவேற்புரை ஆற்றினர். இளைஞர் எழுச்சி பாசறை மாவட்ட அமைப்பாளர் இரா. லோகநாதன் முன்னிலை வகித்தார். கரூர் கிழக்கு மாவட்ட செயலாளர் அ. சக்திவேல் (எ) ஆற்றலரசு கண்டன உரை ஆற்றினார். இந்நிகழ்வில் பா. பார்த்தீபன், ப்ரீத்திக் , அ. ரஞ்சித் , ச. வீரமணி, பெ. நாகராஜ், ரா. வடிவேல், தி. பெருமாள், ப. பூபதி, ப. சூர்யா , ந. நித்திஷ் , ந. சந்தோஷ் , சு. பிரவீன் , சு. பிரதீப் ஆகியோர் கலந்து கொண்டனர் இறுதியில் சுபாஷ் நன்றி உரையாற்றினார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி