வயிற்று வலியால் அவதிப்பட்ட இளைஞர்- விஷம் குடித்து தற்கொலை.

75பார்த்தது
வயிற்று வலியால் அவதிப்பட்ட இளைஞர் விரக்தியில் விஷம் குடித்து தற்கொலை.

கரூர் மாவட்டம், வெள்ளியணை காவல் எல்லைக்குட்பட்ட, ஏமூர் நடுப்பாளையம், அம்மன் நகர் பகுதியை சேர்ந்தவர் சக்திவேல் மகன் பழனிச்சாமி வயது 25. இவரது மனைவி திவ்யா வயது 22.

பழனிசாமி கடந்த ஒரு வருடமாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார்.



இதற்காக சிகிச்சை மேற்கொண்டும் உரிய பலன் அளிக்கவில்லை.

இதனால் விரக்தியோடு வாழ்ந்து வந்த பழனிச்சாமி ஏப்ரல் 20 ஆம் தேதி மாலை 4 மணி அளவில், அவரது வீட்டில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார்.

இதனை அறிந்ததும், உடனடியாக அவரை மீட்டு கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் பழனிச்சாமி ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இந்த சம்பவம் அறிந்த பழனிச்சாமி மனைவி திவ்யா, இது குறித்து காவல்துறையினர்க்கு அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல்துறையினர், உயிரிழந்த பழனிசாமியின் உடலை உடற்கூறு ஆய்வுக்காக, கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சவக்கிடங்குக்கு அனுப்பி வைத்து, இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் வெள்ளியணை காவல்துறையினர்.

தொடர்புடைய செய்தி