கரூர் மாவட்டம் கடவூர் தாலுகா சுக்காம்பட்டியைச் சேர்ந்தவர் பொன்னுசாமி மனைவி மாரியம்மாள் (45) இவர் தனது வீட்டின் பின்புறம் சட்ட விரோதமாக மது விற்பனை செய்துள்ளார். தகவல் அறிந்த பாலவிடுதி போலீசார் மதுவிற்ற மாரியம்மாள் மீது வழக்கு பதிந்து நேற்று கைது செய்தனர். மேலும் விற்பனைக்கு வைத்திருந்த 8 மது பாட்டில்கள் பறிமுதல் செய்துள்ளனர்.