சீத்தமுள்ளு காட்டில் மது விற்றவர் கைது

61பார்த்தது
சீத்தமுள்ளு காட்டில் மது விற்றவர் கைது
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுக்கா வெள்ளையகவுண்டனூர் பகுதியைச் சேர்ந்தவர் வடிவேல் மகன் வெங்கடேசன் (38). இவர் மத்தகிரி டாஸ்மாக் அருகே உள்ள சீத்தகாடு பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்துள்ளார். தகவல் அறிந்த சிந்தாமணி பட்டி போலீசார் மது விற்ற வெங்கடேசன் மீது வழக்குப்பதிந்து நேற்று கைது செய்தனர். மேலும் விற்பனைக்கு வைத்திருந்த 7 மது பாட்டில்கள் பறிமுதல் செய்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி