வீட்டின் பின்புறம் மது விற்ற நபர் கைது

55பார்த்தது
வீட்டின் பின்புறம் மது விற்ற நபர் கைது
கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் தாலுகா பிச்சம்பட்டியைச் சேர்ந்தவர் பழனியப்பன் மகன் சின்னையன் (61). இவர் தனது வீட்டின் பின்புறம் சட்டவிரோதமாக மது விற்பனை செய்துள்ளார். தகவல் அறிந்த மாயனூர் போலீசார் மது விற்ற சின்னையன் மீது வழக்குப்பதிந்து நேற்று கைது செய்தனர். மேலும் விற்பனைக்கு வைத்திருந்த 7 மது பாட்டில்கள் பறிமுதல் செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி