ரெட்டிபாளையம்-டூவீலர்- கார் மோதி விபத்து. பெண் படுகாயம்.

68பார்த்தது
ரெட்டிபாளையத்தில் டூவீலர் மீது கார் மோதி விபத்து. பெண் உள்பட இருவர் படுகாயம்.

ஈரோடு மாவட்டம், பள்ளிபாளையம், அருகே நசியனூர் பகுதியைச் சேர்ந்தவர் ஜெகதீஷ் மகன் அரவிந்த் வயது 20.

இவரது உறவினர் அதே பகுதியைச் சேர்ந்த வெங்கடேஷ் மனைவி ஜெயமணி வயது 38.

இவர்கள் இருவரும் ஜூன் 2ம் தேதி காலை 10 மணி அளவில், கரூர் - ஈரோடு சாலையில் அவர்களது டூவீலரில் சென்று கொண்டு இருந்தனர்.

இவர்களது வாகனம் கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட ரெட்டிபாளையம் அருகே வந்தபோது, அதே சாலையில், ஈரோடு மாவட்டம், கொடுமுடி, ராசாம்பாளையத்தை சேர்ந்த சேகரன் வயது 58 என்பவர் வேகமாக ஓட்டி வந்த கார், அரவிந்த் ஓட்டிச் சென்ற டூவீலரின் பின்னால் மோதி விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் அரவிந்த் மற்றும் ஜெயமணி ஆகிய இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது.


உடனடியாக இருவரையும் மீட்டு கரூரில் உள்ள செந்தில் கேர் மருத்துவமனையில் அரவிந்தையும், சித்தோடு வீணா மருத்துவமனையில் ஜெயமணியையும் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இதில் அரவிந்த் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக அரவிந்த் அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், இது தொடர்பாக காரை வேகமாகவும், அஜாக்கிரதையாகவும் ஓட்டி, விபத்து ஏற்படுத்திய சேகரன் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் கரூர் மாநகர காவல் துறையினர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி