டூவீலர்-சரக்கு வாகனம் மோதல்; கணவன் மனைவி படுகாயம்

3311பார்த்தது
டூவீலர்-சரக்கு வாகனம் மோதல்; கணவன் மனைவி படுகாயம்
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தாலுகா, நாகம்பள்ளி அருகே உள்ள பெரிய சீத்தம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் விமல் வயது 32. இவரது மனைவி பாரதி வயது 26. இவர்கள் இருவரும் மார்ச் 16ஆம் தேதி காலை 10: 30 மணி அளவில், திண்டுக்கல்- கரூர் செல்லும் சாலையில் அவர்களது டூவீலரில் சென்று கொண்டிருந்தனர்.

இவர்களது வாகனம் தடா கோவில் பிரிவு அருகே வந்தபோது, திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை, ரெட்டியூர் அருகே உள்ள மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த விஜயகுமார் என்பவர் ஓட்டி வந்த பொலிரோ பிக் அப் வேன், விமல் ஓட்டி வந்த டூவீலர் மீது நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் டூவீலர் உடன் கீழே விழுந்ததில் விமல் மற்றும் அவரது மனைவி பாரதி ஆகிய இருவருக்கும் பலத்த காயங்கள் ஏற்பட்டது. உடனடியாக இருவரையும் மீட்டு, தனியார் ஆம்புலன்ஸ் மூலம், கரூரில் உள்ள ரத்னா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக பாரதியின் சகோதரர் மணிகண்டன் வயது 25 என்பவர், அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட அரவக்குறிச்சி காவல்துறையினர், இது தொடர்பாக வேகமாகவும், அஜாக்கிரதையாகவும் சரக்கு வாகனத்தை ஓட்டி, விபத்து ஏற்படுத்திய விஜயகுமார் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் .

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி