டூவீலர் சரக்கு வாகனம் மோதல்; மனைவி கண் முன் கணவன் உயிரிழப்பு

1537பார்த்தது
டூவீலர் சரக்கு வாகனம் மோதல்; மனைவி கண் முன் கணவன் உயிரிழப்பு
கரூர் மாவட்டம், புகலூர் தாலுகா, மேற்கு காட்டூரை சேர்ந்தவர் ஜோதி வேலாயுதம் வயது 58. இவரது மனைவி ஜெயந்தி வயது 50. இவர்கள் இருவரும் ஏப்ரல் 12ம் தேதி காலை 8 மணி அளவில், தவிட்டுப்பாளையம்-புகலூர் சாலையில் டூவீலரில் சென்றனர்.

இவர்களது வாகனம் அந்த சாலையில் உள்ள தயாநிதி என்பவர் வீட்டின் அருகே சென்ற போது, திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை, காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த சிவகுமார் வயது 24 என்பவர், வேகமாக ஓட்டி வந்த டாடா ஏஸ் வாகனம் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் ஜோதி வேலாயுதத்திற்கு பலத்த காயம் ஏற்பட்டதால், சம்பவ இடத்திலேயே துடி துடித்து உயிரிழந்தார்.

இவரது மனைவிக்கு பலத்த காயம் ஏற்பட்டதால், அவரை மீட்டு, கரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். உயிரிழந்த ஜோதி வேலாயுதத்தின் உடலை மீட்டு, உடற்கூறு ஆய்வுக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக ஜோதி வேலாயுதத்தின் உறவினர் ஜீவரத்தினம் அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட வேலாயுதம்பாளையம் காவல்துறையினர், சரக்கு வாகனத்தை வேகமாகவும், அஜாக்கிரதையாகவும் ஓட்டி விபத்து ஏற்படுத்திய சிவக்குமார் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி