பணியின் போது தவறி விழுந்தவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு.

67பார்த்தது
பணியின் போது தவறி விழுந்தவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு.
ஆலமரத்துப்பட்டி- பணியின் போது தவறி கிணற்றில் விழுந்தவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு. காவல்துறை வழக்கு பதிவு.

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தாலுகா, ஆலமரத்துப்பட்டி அருகே உள்ள ஆண்டிப்பட்டி காலனி பகுதியைச் சேர்ந்தவர் ராஜ்குமார் வயது 34.
இவர் அப்பகுதியில் கூலி வேலை செய்து வந்தார்.

இந்நிலையில் ஜூன் 10ஆம் தேதி காலை 8-மணி அளவில், ஆலமரத்துபட்டி பகுதியில் உள்ள வாங்கியப்பன் என்பவரது தோட்டத்தில் கிணற்று மோட்டார் பழுதாகி இருந்ததால், அதை பழுது நீக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார்.

பழுது நீக்கும் பணியின்போது அவரது காலில் கயிறு தடுக்கியதால் நிலை தடுமாறி கிணற்றுக்குள் விழுந்தவர் நீரில் மூழ்கினார்.

உடனடியாக இது குறித்து அரவக்குறிச்சி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்ததும், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு நிலைய வீரர்கள், கிணற்றுக்குள் இறங்கி நீரில் மூழ்கிய ராஜ்குமாரை மீட்டனர்.

உடனடியாக அவரை அரவக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது, அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் உயிர் இழந்து விட்டதாக தெரிவித்தனர்.

இந்த சம்பவம் அறிந்த ராஜ்குமாரின் மனைவி சத்யபிரியா வயது 26 என்பவர், காவல்துறையினருக்கு அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், உயிரிழந்த ராஜகுமாரின் உடலை அரவக்குறிச்சி அரசு மருத்துவமனை சவக்கிடங்குக்கு அனுப்பி வைத்து, வழக்குப்பதிவு செய்தனர்.

தொடர்புடைய செய்தி