நானப்பரப்பு பிரிவு- டூவீலர்கள் நேருக்கு நேர் மோதல்.

80பார்த்தது
நானப்பரப்பு பிரிவு அருகே டூவீலர்கள் நேருக்கு நேர் மோதல். இருவர் படுகாயம்.

நாமக்கல் மாவட்டம் மோகனூர் அருகே ராசி பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் வயது 62.


இவரது மகன் சரவணக்குமார் வயது 37.

இவர்கள் இருவரும் ஏப்ரல் 9-ம் தேதி காலை 9 மணியளவில், சேலம்- கரூர் சாலையில் டூவீலரில் சென்று கொண்டு இருந்தனர். சரவணகுமார் டூவீலரை ஓட்டி சென்றார்.


இவர்கள் வந்த வாகனம் நாணப்பரப்பு பிரிவு அருகே வந்தபோது, எதிர் திசையில், புகலூர் தாலுக்கா, செங்காட்டனூர் பகுதியை சேர்ந்த ராசப்பன் வயது 73 என்பவர் வேகமாக ஓட்டி வந்த மற்றொரு டூவீலர் சரவணகுமார் ஓட்டி வந்த டூவீலர் மீது நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் வாகனத்துடன் கீழே விழுந்ததில் ராஜேந்திரன் மற்றும் ராசப்பன் ஆகிய இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது.


உடனடியாக இருவரையும் மீட்டு கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

சம்பவம் தொடர்பாக சரவணகுமார் அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், டூவீலரை வேகமாகவும், அஜாக்கிரதையாகவும் ஓட்டி விபத்து ஏற்படுத்திய ராசப்பன் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் வேலாயுதம்பாளையம் காவல்துறையினர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி