க. பரமத்தி- டூவீலர்கள் நேருக்கு நேர் மோதல். ஒருவர் படுகாயம்.

56பார்த்தது
க. பரமத்தி அருகே டூவீலர்கள் நேருக்கு நேர் மோதல். ஒருவர் படுகாயம்.

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தாலுக்கா, இளவனூர் பகுதியைச் சேர்ந்தவர் செல்வராஜ் வயது 63.

இவர் ஜூன் 10ஆம் தேதி காலை 7: 30- மணி அளவில், தாராபுரத்தில் இருந்து விஸ்வநாதபுரி செல்லும் சாலையில் அவரது டூவீலரில் சென்று கொண்டு இருந்தார்.


இவரது வாகனம்
க. பரமத்தி பாலமுருகன் லாரி செட் அருகே சென்ற போது, எதிர் திசையில் வேகமாக வந்த,
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தாலுகா,
அனைப்பாளையம் அருகே உள்ள முடிகணம் பகுதியை சேர்ந்த மணிமுத்து வயது 25 என்ற இளைஞர் ஒட்டி வந்த டூ வீலர், செல்வராஜ் ஓட்டிச் சென்ற டூவீலர் மீது நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் பலத்த காயமடைந்த செல்வராஜை மீட்டு, தனியார் ஆம்புலன்ஸ் மூலம், கரூரில் உள்ள அமராவதி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இந்த சம்பவம் குறித்து செல்வராஜ் அளித்த புகார் பேரில், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், டூவீலரை வேகமாகவும், அஜாக்கிரதையாகவும் ஒட்டி விபத்து ஏற்படுத்திய மணிமுத்து மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்
க. பரமத்தி காவல்துறையினர்.

டேக்ஸ் :