பனையம்பாளையத்தில் சட்டவிரோத மது விற்பனை- பெண் கைது

69பார்த்தது
கரூர் மாவட்டம், சின்ன தாராபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோத மது விற்பனை நடப்பதாக மதுவிலக்கு சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் சரவணனுக்கு தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் ஜூன் 4-ஆம் தேதி காலை 10 மணி அளவில், சின்னதாராபுரம் அருகே உள்ள பனையம்பாளையம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டார்.

அப்போது வடக்கு தெருவில் சட்ட விரோதமாக மது விற்பனை நடப்பது கண்டறியப்பட்டது. இந்த விற்பனையில் ஈடுபட்ட பனையம் பாளையம், அம்பேத்கர் காலனியை சேர்ந்த ராமசாமி மனைவி மகேஸ்வரிசக்தி (43) என்பவரை கைது செய்து, அவர் விற்பனைக்கு வைத்திருந்த 12 குவாட்டர் மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

பின்னர் மகேஸ்வரி சக்தி மீது வழக்கு பதிவு செய்த சின்ன தாராபுரம் காவல் துறையினர், அவரை காவல் நிலையப் பினையில் விடுவித்து நடவடிக்கை மேற்கொண்டனர்.

தொடர்புடைய செய்தி