பேருந்து நிலையத்தில் கஞ்சாவை பதுக்கி வைத்த 4- பேர் கைது.

72பார்த்தது
அரவக்குறிச்சி பேருந்து நிலையத்தில் கஞ்சாவை பதுக்கி வைத்த நான்கு பேர் கைது.

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் போதைப் பொருளான கஞ்சாவை பதுக்கி வைத்திருப்பதாக பெண் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் சிவகாமிக்கு தகவல் கிடைத்தது.


இந்த தகவலின் அடிப்படையில் ஜூலை 15ஆம் தேதி காலை 6: 30 மணி அளவில் அரவக்குறிச்சி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டார்.

அப்போது, அரவக்குறிச்சி பேருந்து நிலைய பகுதியில் கஞ்சாவை பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும், அங்கு பதுக்கி வைத்திருந்த ரூபாய் 7, 500- மதிப்புள்ள 750 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

மேலும், இது தொடர்பாக விசாரணையில், திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அருகே வெள்ளையாம்பட்டியை சேர்ந்த சுரேந்தர் வயது 21, அருகே தேவகவுண்டம்பட்டியை சேர்ந்த விக்னேஸ்வரன் வயது 28, சாளரப்பட்டியை சேர்ந்த சிவகுமார் வயது 23, அரவக்குறிச்சி தாலுக்கா, வேலம்பாடி, அண்ணா நகரை சேர்ந்த ஹாருன் சேட் வயது 25 ஆகிய 4- பேரும் கஞ்சாவை பதுக்கி வைத்திருந்தது கண்டறியப்பட்டது.

இந்த சட்டவிரோத செயலில் ஈடுபட்ட நான்கு பேரையும் கைது செய்து, அவர்கள் வைத்திருந்த ரூபாய் ஆயிரத்தையும் பறிமுதல் செய்தனர்.

மேலும், நான்கு பேர் மீதும் வழக்கு பதிவு செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்து நடவடிக்கை மேற்கொண்டனர் அரவக்குறிச்சி காவல் துறையினர்.

தொடர்புடைய செய்தி