கத்தோலிக்க கல்லூரியில் வேலை வாய்ப்பு முகாம்

63பார்த்தது
கத்தோலிக்க கல்லூரியில் வேலை வாய்ப்பு முகாம்
கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை அடுத்த மரியகிரி மலங்கரை கத்தோலிக்க கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது, முகாமிற்கு கல்லூரி தாளாளர் அருட்தந்தை அருள்தாஸ் தலைமை தாங்கினார். முகாமில் உயிர் வேதியல், உயிர் தொழில்நுட்பவியல் மற்றும் நுண்ணுயிரியல் துறை சேர்ந்த மாணவர்கள் வேலை வாய்ப்பு முகாமில் பங்கேற்றனர், கேப் ஸ்டேட் நிறுவனமானது இந்த வேலை வாய்ப்பு முகாமினை நடத்தியது. இதில் 18 மாணவ, மாணவியர் தேர்வு செய்யப்பட்டனர். கல்லூரி மனிதவள மேம்பாட்டு துறை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் முனைவர் சுரேஷ் , வணிக மேலாண்மை துறை தலைவர் லெனின் ஜாண் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தொடர்புடைய செய்தி