வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வரும் நிலையில் சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள கோச்சடை கிராமத்தில் கடந்த 2 நாட்களாக மழை பெய்து வந்தது. நெல் அறுவடை முடிந்த நிலையில் தற்போது விவசாயிகள் தங்களது விளை நிலங்களை உழவுப் பணி மேற்கொண்டு மறு விதைப்புக்கு தயார் செய்து வருகின்றனர். அதே போல் நாளை வெளியாகவுள்ள தமிழக அரசின் வேளாண் நிதிநிலை அறிக்கையில் விவசாயம் சார்ந்த பல முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.