குமரியில் வளர்ச்சித்திட்ட பணிகள் குறித்து கலந்தாய்வு.

72பார்த்தது
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக நாஞ்சில் கூட்டரங்கில் நேற்று மாலை பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் அவர்கள் மாவட்ட ஆட்சித்தலைவர் ஸ்ரீதர், இ. ஆ. ப. , அவர்கள் முன்னிலையில் பல்வேறு துறைகள் மூலம் நடைபெற்றுவரும் வளர்ச்சித்திட்ட பணிகள் குறித்து துறை அலுவலர்களுடன் கலந்தாய்வு மேற்கொண்டார்கள். உடன் நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் நிஷாந்த் கிருஷ்ணா, இ. ஆ. ப. , உதவி ஆட்சியர் பயிற்சி சுஷ்ஸ்ரீ சுவாங்கி குந்தியா, இ. ஆ. ப. , மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) கு. சுகிதா உட்பட பலர் உள்ளார்கள்.

தொடர்புடைய செய்தி