கார் இருசக்கர வாகனம் மோதி விபத்து - மூன்று பேர் படுகாயம்

61பார்த்தது
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் காவல் நிலையத்துக்கு உட்பட்ட உண்ணாமலைக்கடை பகுதியை சேர்ந்தவர்கள் அஜின்( 24 ) , ஜஸ்டின் பிரகாஷ்( 24 ), மேற்கு வங்கத்தைச் சேர்ந்த சங்கர் (26) , ஆகிய மூன்று பேரும் நேற்று உண்ணாமலை கடையிலிருந்து மார்த்தாண்டத்திற்கு பொருள்கள் வாங்குவதற்காக அஜின்-ன் இருசக்கர வாகனத்தில் 3-பேரும் சென்றுள்ளனர். இவர்கள் மூன்று பேரும் மார்த்தாண்டம் கீழ்ப்பம்மம் பகுதியில் உள்ள குளத்தின் அருகாமையில் சென்று கொண்டிருந்த போதுஎதிரே வேகமாக வந்த கார் இவர்களது இருசக்கர வாகனத்தில் மோதி உள்ளது. இதில் மூன்று பேரும் தூக்கி வீசப்பட்டு சாலையில் சிதறிய நிலையில் காணப்பட்டனர். இவர்களது கூக்குரலைக் கேட்டு அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு சங்கர், ஜஸ்டின் பிரகாஷ் ஆகியோரை மார்த்தாண்டத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கும், அஜினை ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கும் சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இந்த விபத்து குறித்த சிசிடி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இது குறித்து மார்த்தாண்டம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி