கழிவு பொருட்கள் கொண்டு வந்த லாறி முற்றுகை

78பார்த்தது
குமரி மாவட்டம் குமரி கேரளா எல்லை- சோதனை சாவடி வழியாக நள்ளிரவில் கேரளாவில் இருந்து துர்நாற்றம் வீசிய நிலையில் புழுக்களுடன் இறைச்சி கழிவுகள் ஏற்றி வரப்பட்ட வாகனத்தை குழித்துறை அருகே விளவங்கோடு ஊராட்சி ஈத்தவிளை பகுதியில் வைத்து ஊர்மக்கள் மடக்கி பிடித்துள்ளனர். இந்த வாகனத்தை மடக்கி பிடித்த பொதுமக்கள் விளவங்கோடு சட்டமன்ற உறுப்பினர் தாரகை கத்பர்ட் -க்கு தகவல் கொடுத்துள்னர். இதை அடுத்து சட்டமன்ற உறுப்பினர் தாரகை கத்பர்ட் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தார். இதை அடுத்து களியக்காவிளை காவல்த்துறை மற்றும் விளவங்கோடு ஊராட்சி ஊராட்சி தலைவர் லைலா ரவிசங்கர், மேல்புறம் ஒன்றிய கவுன்சில் ரவிசங்கர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்தனர். ஊராட்சி அதிகாரிகள் இந்த கழிவுகள் ஏற்றி வந்த லாரிக்கு 50- ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தது , இந்த வாகனத்தை களியக்காவிளை காவல்த்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

தொடர்புடைய செய்தி