கன்னியாகுமரி மாவட்டத்தில் மலையோர பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் முக்கிய அணையான பேச்சிபாறை அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் பேச்சிபாறை அணையில் இருந்து 500 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. இதனால் தாமிரபரணி, கோதையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. முக்கிய ஆறுகள் குளங்கள் அணைகள் நிரம்பி வருவதால் திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் நலன் கருதி பேரூராட்சி நிர்வாகம் குளிக்க தடை விதித்துள்ளது.