கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள பிரசித்திபெற்ற அருள்மிகு ஸ்ரீ நாகராஜா திருக்கோவிலில் தைப்பெருந் திருவிழா கடந்த பிப். 3ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து 9ஆம் நாள் திருவிழாவான திருத்தேரோட்டம் இன்று (பிப். 11) நடைப்பெற்றது. இதில், அனந்த கிருஷ்ணசுவாமி பாமா ருக்மணியுடன் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.