நாகர்கோவிலில் ஆசிரியரை தாக்கிய 3 பேர் மீது வழக்கு.

2901பார்த்தது
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே மணிகட்டிபொட்டல் தாமரைகுட்டி விளையை சேர்ந்தவர் எட்வின் (வயது 52), வடலிவிளை அரசு உயர் நிலைப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவருக்கும், மணிக்கட்டிபொட்டல் பிள்ளையார்புரத்தைச் சேர்ந்த தனபால் என்பவருக்கும் இடையே சொத்து வாங்குவதில் முன்விரோதம் உள்ளது. இந்த நிலையில் எட்வின் நேற்று முன்தினம் அவருடைய மனைவி கவிதா ஜோதியுடன் மோட்டார் சைக்கிளில் இருளப்பபுரம் மீன் சந்தை அருகே சென்று கொண்டிருந்தார்.

அப்போது தனபால், என். ஜி. ஓ. காலனியை சேர்ந்த பாபு என்ற ஆட்டோ பாபு மற்றும் ஒருவர் என மொத்தம் 3 பேர் சேர்ந்து எட்வினை வழிமறித்து தகாத வார்த்தைகள் பேசியதோடு திடீரென தாக்கி விட்டு தப்பினர். இதில் காயம் அடைந்த எட்வின் நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து கோட்டார் போலீஸ் நிலையத்தில் எட்வின் புகார் அளித்தார்.

அதன்பேரில் தனபால் உள்ளிட்ட 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி