அண்ணா விளையாட்டு அரங்கம் புனரமைப்பு பணி தீவிரம்.

57பார்த்தது
அண்ணா விளையாட்டு அரங்கம் புனரமைப்பு பணி தீவிரம்.
நாகர்கோவில் வடசேரியில் அண்ணா விளையாட்டு மைதானம் உள்ளது. இங்கு நீச்சல் குளம், மாணவிகளுக்கான விடுதி ஆகியவையும் உள்ளன. அண்ணா விளையாட்டு மைதானத்தில் பயிற்சி பெற்றவர்கள் மாநில, தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளிலும் சாதனை படைத்துள்ளனர். இங்கு ஏற்கனவே ஓடுதளம் சீரமைக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக அண்ணா விளையாட்டு மைதானத்தை புனரமைப்பு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்த நிலையில் தற்போது மைதானத்தில் ரூ. 1 கோடி செலவில் புனரமைப்பு பணிகள் தொடங்கி உள்ளன. அலுவலக அறை புதிதாக அமைக்கப்பட உள்ளது. விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட இருக்கின்றன. மைதானத்தில் உள்ள கேலரிகள் உடைத்தும், பாசி படர்ந்தும் காணப்படுகிறது. எனவே அது சீரமைக்கப்பட உள்ளது. மொத்தத்தில் அண்ணா விளையாட்டு மைதானம் பழமை மாறாமல் புனரமைக்கப்பட்டு வருகிறது. இந்த பணிகள் ஓரிரு வாரங்களில் முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி