நீச்சலடித்த சிறுவன் மீது பாய்ந்து கவ்விய முதலை

59பார்த்தது
நீச்சலடித்த சிறுவன் மீது பாய்ந்து கவ்விய முதலை
ஆஸ்திரேலியாவின் சாய்பாய் தீவில் 16 மற்றும் 13 வயதுடைய இரு சிறுவர்கள் படகில் சென்றனர். இஞ்சின் கோளாறு காரணமாக படகு நின்றதால் தண்ணீரில் நீச்சலடித்தபடி கரையை நோக்கி வந்துக் கொண்டிருந்தனர். அப்போது முதலை ஒன்று 16 வயது சிறுவன் மீது பாய்ந்து கவ்வியது. தகவலின் பேரில் நீச்சல் வீரர்கள் தண்ணீரில் இருந்து சிறுவனின் சடலத்தை கண்டெடுத்தனர். அவன் உடலில் பல இடங்களில் காயங்கள் இருந்த நிலையில் முதலை தாக்குதல் காரணமாகவே இறந்ததாக போலீசார் உறுதி செய்துள்ளனர்.