குழித்துறையில் அரசு பஸ் டிரைவர்கள் திடீர் போராட்டம்

57பார்த்தது
குழித்துறையில் அரசு பஸ் டிரைவர்கள் திடீர் போராட்டம்
குழித்துறை பணிமனையில் இருந்து இயங்கூடிய இரண்டு பேருந்துகளின் ஓட்டுநர்களை பணிமனை மேலாளர் உரிய காரணங்கள் இன்றி பணி இடமாற்றம் செய்து உத்தரவு பிறப்பித்து உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த பணிமனையில் இருந்து கன்னியாகுமரி பகுதிக்கு இயக்கப்படும் அரப் பேருந்துகளை இயக்காமல் நிறுத்தி வைத்துள்ளதோடு, ஏற்கனவே 8 மணி நேரம் வேலை செய்த பணியாளர்களை 12 மணி நேரம் வேலை செய்ய வற்புறுத்தியும் வந்ததாக கூறப்படுகிறது.
இதனால் பணியிட மாற்றம் செய்தவர்களை மீண்டும் இதே பணிமனையில் வேலைக்கு அமர்த்தவும், 12 மணி நேர வேலையை மீண்டும் 8 மணி நேரமாக மாற்றித் தரக்கோரி பேருந்துகளை இயக்காமல் இன்று போராட்டத்தில் இறங்கினர். சம்பவ இடத்திற்கு வந்த களியக்காவிளை போலீஸார் அவர்களை சமாதானம் செய்து பேச்சுவார்த்தை நடத்த முயன்றனர். ஆனால் அவர்களிடம்போக்குவரத்து தொழிலாளர் பேச்சுவார்த்தை நடத்த முன்வராமல் போராட்டத்தை தொடர்ந்தனர்.

  இது குறித்து தகவல் அறிந்த விளவங்கோடு சட்டமன்ற உறுப்பினர் தாரகை கத்பட் சம்பவ இடத்திற்கு வந்து போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்தார். பின் தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் பணிமனை அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதையடுத்து பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து பேருந்துகள் மீண்டும் இயக்கப்பட்டது. இதனால் 3 மணி நேரம் கடும் அவதிக்கு ஆளாகினர்.

தொடர்புடைய செய்தி